sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் மரங்கள்; இரவில் விபத்து ஏற்படும் அபாயம்

/

போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் மரங்கள்; இரவில் விபத்து ஏற்படும் அபாயம்

போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் மரங்கள்; இரவில் விபத்து ஏற்படும் அபாயம்

போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் மரங்கள்; இரவில் விபத்து ஏற்படும் அபாயம்


ADDED : மே 06, 2024 10:51 PM

Google News

ADDED : மே 06, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;'கூடலுார் இரும்புபாலம் பகுதியில், விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் கிடக்கும் மரங்களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலுார், இரும்புபாலம் அருகே கோழிக்கோடு சாலையோரம் இருந்த மரம், கடந்த மாதம், 4ம் தேதி, அதிகாலை சாலையில் சாய்ந்தது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது; மின் கம்பம் சேதமடைந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

தீயணைப்புத் துறையினர், சாலையில் சாய்ந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மின் துறையினர் மின்கம்பத்தை மாற்றி மின் சப்ளை வழங்கினர்.

தொடர்ந்து, மரத்துண்டுகள் மற்றும் அடிப்பாகத்தை முழுமையாக அகற்ற நெடுஞ்சாலை துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் மரத்தின் அடிபாகம், மர துண்டுகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

டிரைவர்கள் கூறுகையில், 'விபத்து ஏற்படும், ஆபத்தான நிலையில் உள்ள மரத்தின் அடிப்பாகம் மற்றும் சாலையோரம் கிடக்கும் வெட்டப்பட்ட மரத்துண்டுகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரவில் இந்த மரங்கள் இருப்பது தெரியாது என்பதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us