sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மசினகுடி வனப்பகுதியில் இறந்து கிடந்த இரு யானைகள்

/

மசினகுடி வனப்பகுதியில் இறந்து கிடந்த இரு யானைகள்

மசினகுடி வனப்பகுதியில் இறந்து கிடந்த இரு யானைகள்

மசினகுடி வனப்பகுதியில் இறந்து கிடந்த இரு யானைகள்


ADDED : ஆக 09, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 09, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முதுமலை, மசினகுடி வனப்பகுதியில் குட்டி மற்றும் பெண் யானை இறந்து கிடந்தன.

முதுமலை, மசினகுடி கோட்டம், மசினகுடி வனத்தில் வன ஊழியர்கள் இரு நாட்களுக்கு முன், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மரம் விழுந்து பெண் யானை உயிரிழந்தது தெரிய வந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். துணை இயக்குனர் அருண், வனச்சரகர் பாலாஜி ஆய்வு செய்தனர். உடலை முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேதபரிசோதனை செய்தார்.

* மசினகுடி சீகூர் வனப்பகுதியில் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியின் போது, அழுகிய நிலையில் குட்டி யானை இறந்து கிடந்தது. அதிகாரிகள் ஆய்வுக்குப்பின், உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

வனத்துறையினர் கூறுகையில்,'மசினகுடி வனத்தில் இறந்த பெண் யானைக்கு, 30 வயது இருக்கும். பலத்த காற்றின் போது சாய்ந்த மரம் விழுந்து, யானை உயிரிழந்துள்ளது. மேலும், சீகூர் பகுதியில் பிறந்து ஆறு மாதமான, குட்டி யானை உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இறந்ததுக்கான காரணம் தெரியவில்லை. ஆய்வக பரிசோதனைக்காக உடல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு கிடைத்த பின்பே, இறப்புக்கான காரணம் தெரிய வரும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us