sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குன்னுார் ரயில் நிலையத்தில் 150 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வெட்டுவதை தடுக்க வலியுறுத்தல்

/

குன்னுார் ரயில் நிலையத்தில் 150 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வெட்டுவதை தடுக்க வலியுறுத்தல்

குன்னுார் ரயில் நிலையத்தில் 150 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வெட்டுவதை தடுக்க வலியுறுத்தல்

குன்னுார் ரயில் நிலையத்தில் 150 ஆண்டு பழமை வாய்ந்த மரம் வெட்டுவதை தடுக்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 20, 2024 01:01 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;'குன்னுார் மலை ரயில் நிலையத்தில் பழமையான மரத்தை பாதுகாக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுார் ரயில் நிலையத்தில், அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய் மதிப்பில் பார்க்கிங் வசதிகளுடன் மறு வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரத்தை சுற்றி மண் தோண்டப்பட்டுள்ளது. மரம் வெறும் அபாயத்தில் உள்ளது.

மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில்,''அழகான பழமை வாய்ந்த இந்த மரத்தை பாதுகாக்க, தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பழைய மரத்தின் அழகை தக்க வைக்க, 10 சதுர அடி நிலத்தில் போதுமான இடம் உள்ள நிலையில் மரத்தை பாதுகாக்க அதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். நெஸ்ட் அமைப்பு நிறுவனத் தலைவர் சிவதாஸ் கூறுகையில, ''ரயில் நிலையத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த காட்டுமரம் ஆக்சிஜன் மற்றும் நிழல் தரும் மரமாக உள்ளது. பறவைகள் வந்து அமரக்கூடிய வாழ்விடமாகவும் உள்ளது.

இந்த மரத்தை வெட்ட அனுமதிக்க கூடாது,''என்றார்.






      Dinamalar
      Follow us