/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரிக்குள் நுழைய இ - -பாஸ் முறை அமல்
/
நீலகிரிக்குள் நுழைய இ - -பாஸ் முறை அமல்
ADDED : மே 07, 2024 11:18 PM

கூடலுார்:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் சுற்றுலா பயணியர் வருகை அதிகமானதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுகிறது. இதை கட்டுப்படுத்த, நேற்று முதல், ஜூன் 30ம் தேதி வரை வாகனங்கள் இ -- பாஸ் பெற்று, நீலகிரிக்கு வர, ஐகோர்ட் உத்தரவிட்டது.
தொடர்ந்து, இ- - பாஸ் பெறுவது தொடர்பாக, நீலகிரி மாவட்ட நிர்வாகம் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 'நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு தடையும் இல்லை. முறையாக இ -- பாஸ் பெரும் அனைத்து வாகனங்களும் வரலாம்' என, மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்தார்.
அதன்படி, நேற்று காலை முதல், நீலகிரி மாவட்டத்திற்கு நுழையும் வாகனங்களுக்கு இ -- பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழகம் - கேரளா -- கர்நாடக மாநில எல்லைகளில் வருவாய் துறையினர் மற்றும் மகளிர் சுயஉதவி குழு அடங்கியக் குழுக்கள், நீலகிரிக்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்து, இ- - பாஸ் உள்ள வாகனங்களை அனுமதித்தனர்.
இ-- - பாஸ் பெறாத வாகனங்களுக்கு உடனடியாக, பாஸ் பெற வசதியாக, ஊழியர்கள் 'கியூ .ஆர்' குறியீடு ஸ்கேன் வசதியும் செய்துள்ளனர்.

