sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையில் நிறுத்தும் வாகனங்கள் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

/

சாலையில் நிறுத்தும் வாகனங்கள் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

சாலையில் நிறுத்தும் வாகனங்கள் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

சாலையில் நிறுத்தும் வாகனங்கள் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


ADDED : ஜூலை 16, 2024 01:31 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் சிம்ஸ்பார்க் சாலை ஓரத்தில் நிறுத்தும் வாகனங்களால் மெயின் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

குன்னுார் சிம்ஸ்பார்க் பகுதியில் போதிய பார்க்கிங் வசதி தனியாக ஏற்படுத்தாத நிலையில் சுற்றுலா வாகனங்கள் மாநில நெடுஞ்சாலை இடத்தில் நிறுத்தப்படுகிறது. இதற்கு நகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டு, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இங்கு எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீர் குழாய்கள் சாலையோரத்தில் உள்ளன. பாஸ்டியர் நிறுவனம், உட்பட நகராட்சியின் குடிநீர் குழாய்கள் வாகனங்களால் உடைபட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

கவுன்சிலர் உமாராணி கூறுகையில், ''தற்போது சில நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்வதால் மக்கள் சேமித்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும், இது போன்று குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகுவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, சிம்ஸ் பார்க் பகுதியில் வாகனங்களால் இவ்வாறு குழாய்கள் உடைவதை தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us