sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வேளாங்கண்ணி மாதா தேர்பவனி திரளான பங்கு மக்கள் பங்கேற்பு

/

வேளாங்கண்ணி மாதா தேர்பவனி திரளான பங்கு மக்கள் பங்கேற்பு

வேளாங்கண்ணி மாதா தேர்பவனி திரளான பங்கு மக்கள் பங்கேற்பு

வேளாங்கண்ணி மாதா தேர்பவனி திரளான பங்கு மக்கள் பங்கேற்பு


ADDED : செப் 08, 2024 11:19 PM

Google News

ADDED : செப் 08, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுார் பாய்ஸ் கம்பெனி வேளாங்கண்ணி மாதா திருத்தல திருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது.

குன்னுார் பாய்ஸ்கம்பெனி அருகே உள்ள வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில், புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் திருவிழா கடந்த, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, தினமும் நவநாள் திருப்பலி, மறையுரை நடந்தது. நேற்று நடந்த அன்னையின் பிறந்த நாள் விழா சிறப்பு திருப்பலி ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடந்தது.

மாலை, 5:00 மணிக்கு குன்னுார் மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி, மவுன்ட் பிளசன்ட் புனித சகாய மாதா ஆலய பங்குதந்தை ஆல்பர்ட் செல்வராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது. தொடர்ந்து, ஆடம்பர தேர்பவனி நடந்தது. திரளான மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் பங்கு மக்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us