/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கேத்தி கெராடாவில் 'தெவ்வப்பா' திருவிழா நடனமாடி மகிழ்ந்த கிராம மக்கள்
/
கேத்தி கெராடாவில் 'தெவ்வப்பா' திருவிழா நடனமாடி மகிழ்ந்த கிராம மக்கள்
கேத்தி கெராடாவில் 'தெவ்வப்பா' திருவிழா நடனமாடி மகிழ்ந்த கிராம மக்கள்
கேத்தி கெராடாவில் 'தெவ்வப்பா' திருவிழா நடனமாடி மகிழ்ந்த கிராம மக்கள்
ADDED : ஜூலை 13, 2024 08:31 AM
ஊட்டி : ஊட்டி கேத்தி கெராடா அருகே, 'தெவ்வப்பா' திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹிரியோடைய்யா திருவிழா, ஆண்டுதோறும் ஜூலை மாதம் கொண்டாடப்படுகிறது. தொதநாடு சீமையை தலைமை இடமாக கொண்ட, கடநாடு, பொரங்காடு சீமையை தலைமை இடமாக கொண்ட தாந்தநாடு உள்ளிட்ட கிராமங்களில் ஏற்கனவே, திருவிழா நடந்து முடிந்தது.
இந்நிலையில், ஊட்டி அருகே, கேத்தி கெராடா பகுதியில் அமைந்துள்ள பனகுடியில் (வனக்கோவில்) விரதம் இருந்து வந்த பக்தர்கள் ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். தொடர்ந்து, காணிக்கை செலுத்தி, பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று கேத்தி உட்பட, 14 கிராம மக்கள் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை அடுத்து, கேத்தி ஊரில் அமைந்துள்ள 'ஹக்கபக்க' கோவிலில் 'ஹரிக்கட்டுதல்' எனப்படும் தானிய திருவிழா சிறப்பாக நடக்கிறது. இவ்விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். இவ்விழாவால், கேத்தி சுற்றுவட்டார படுகர் கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாவில் ஒரு கட்டமாக வரும், 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஊட்டி அருகே உள்ள ஏக்குணி கிராமத்தில், தெவ்வப்பா திருவிழா கொண்டாடப்படுகிறது.