sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வயநாடு நிலச்சரிவு பாதிப்பு எதிரொலி; கூடலுாரில் எளிமையாக ஓணம் கொண்டாட முடிவு

/

வயநாடு நிலச்சரிவு பாதிப்பு எதிரொலி; கூடலுாரில் எளிமையாக ஓணம் கொண்டாட முடிவு

வயநாடு நிலச்சரிவு பாதிப்பு எதிரொலி; கூடலுாரில் எளிமையாக ஓணம் கொண்டாட முடிவு

வயநாடு நிலச்சரிவு பாதிப்பு எதிரொலி; கூடலுாரில் எளிமையாக ஓணம் கொண்டாட முடிவு


ADDED : செப் 12, 2024 11:37 PM

Google News

ADDED : செப் 12, 2024 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதனை ஒட்டிய நீலகிரி மாவட்டம், கூடலுாரில் ஓணம் பண்டிகை எளிமையாக கொண்டாட மலையாள மக்கள் முடிவு செய்துள்ளனர்.

கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை, கேரளா மட்டுமின்றி, மலையாள மொழி பேசக்கூடிய மக்கள் வசிக்கும், தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஜூலை, 30ம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, மேப்பாடு, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில், 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகள், உடமைகள் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிகழ்வு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிகழ்வின் சோகத்தை கருத்தில் கொண்டு, ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கேரள மாநில சுற்றுலாத்துறை ரத்து செய்து, வீடுகளில் ஓணம் பண்டிகை எளிமையாக கொண்டாடவும்; நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், வயநாடு மாவட்டத்தை ஒட்டிய, நீலகிரி மாவட்டம், கூடலுாரில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள், பள்ளி, கல்லுாரிகள் பொது இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதை ரத்து செய்துள்ளனர்; வீடுகளில் எளிமையான முறையில் ஓணம் பண்டிகை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

கூடலுாரில் வசிக்கும் மலையாள மக்கள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் ஓணம் பண்டிகை, ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். நடப்பு ஆண்டு, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான உயிரிழந்த நிலையில், ஓணம் பண்டிகையை எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us