/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் இறைச்சிக்காக வனவிலங்கு வேட்டை: இருவர் கைது இருவர் கைது
/
குன்னுாரில் இறைச்சிக்காக வனவிலங்கு வேட்டை: இருவர் கைது இருவர் கைது
குன்னுாரில் இறைச்சிக்காக வனவிலங்கு வேட்டை: இருவர் கைது இருவர் கைது
குன்னுாரில் இறைச்சிக்காக வனவிலங்கு வேட்டை: இருவர் கைது இருவர் கைது
ADDED : ஆக 26, 2024 02:08 AM

குன்னுார்;குன்னுாரில் வன விலங்குகளை வேட்டையாடி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
குன்னுாரில் காட்டுப்பன்றி உட்பட வனவிலங்குகள் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின்படி, குன்னுார் வனச்சரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமையில் வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர்கள் ராம்குமார், ஞானசேகர், வனக்காவலர் ஏசுராஜ் ஆகியோர் காட்டேரி அருகே ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், காரில் சந்தேகத்திற்கு இடமாக சென்றவர்களை பிடித்து சோதனை செய்ததில், சுருக்கு வைக்க பயன்படுத்தப்படும் கம்பி, 3 'அவுட்காய்' எனப்படும் நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக வெலிங்டன் பகுதியை சேர்ந்த, நாம் தமிழர் கட்சி உறுப்பினர் ராமகிருஷ்ணன்,38, கிளண்டேலை சேர்ந்த ராஜன்,40, ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'நான்சச் ஒட்டர் லைன் பகுதியில் உள்ள வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து, காட்டு பன்றி உட்பட வன விலங்குகளை ராமகிருஷ்ணன் வேட்டையாடி வந்துள்ளார். பேரக்ஸ் ராணுவ பகுதிகளில் காட்டுப்பன்றி உள்ளிட்ட இறைச்சியை விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது.
நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பச்சை நுால் சுற்றப்பட்ட அணுகுண்டு பட்டாசு, கத்தி, தார்பாய்கள், எடை இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இருவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

