sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உலக சுற்றுச்சூழல் தினம்; வனத்தை பாதுகாக்க அறிவுரை

/

உலக சுற்றுச்சூழல் தினம்; வனத்தை பாதுகாக்க அறிவுரை

உலக சுற்றுச்சூழல் தினம்; வனத்தை பாதுகாக்க அறிவுரை

உலக சுற்றுச்சூழல் தினம்; வனத்தை பாதுகாக்க அறிவுரை


ADDED : ஜூன் 05, 2024 08:23 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 08:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுாரில் நடந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் வனங்களை பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பந்தலுார் அருகே தேவாலா வனச்சரக அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் தினம் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. வனவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். வனச்சரகர் சஞ்சீவி தலைமை வகித்து பேசுகையில், ''வனம் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாலும், புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகள் கட்டடங்களாக மாறி வருவதாலும், இயற்கையான காலநிலை மாறி இரண்டாவது சிரபுஞ்சியில், தண்ணீருக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

வனங்களை பாதுகாப்பது மற்றும் வனப்பகுதிகளை அதிகரிப்பதன் மூலம், இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். வனம் அழிந்தால் மனிதர்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் பாதிக்கப்படும். அனைவரும் வனங்களையும் வன செல்வங்களையும், பாதுகாக்க உறுதி ஏற்க வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து, வனச்சரக வளாகம் மற்றும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் வனக்காப்பாளர்கள் தம்பக்குமார், பரமேஷ், விஸ்வநாதன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us