sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக அணை திறப்பு வினாடிக்கு 1,000 கன அடி வெளியேற்றம்

/

குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக அணை திறப்பு வினாடிக்கு 1,000 கன அடி வெளியேற்றம்

குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக அணை திறப்பு வினாடிக்கு 1,000 கன அடி வெளியேற்றம்

குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக அணை திறப்பு வினாடிக்கு 1,000 கன அடி வெளியேற்றம்


ADDED : நவ 11, 2024 06:51 AM

Google News

ADDED : நவ 11, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி காட்டு குப்பையில் நடந்து வரும் குந்தா நீரேற்று மின் திட்டப்பணிக்காக, எமரால்டு அணையில் இருந்து வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

ஊட்டி அருகே காட்டு குப்பையில், 1,850 கோடி ரூபாயில் குந்தா நீரேற்று மின் திட்டப்பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2022-ம் ஆண்டு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இதுவரை, 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்தக்கட்ட பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

காட்டு குப்பையில் நடந்து வரும் நீரேற்று பணிக்காக எமரால்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்க மின்வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று காலை முதல், வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை திறக்கப்பட்டதால் தண்ணீர் நீரோடை வழியாக கரைபுரண்டோடியது.

குந்தாமின் திட்ட மேற்பார்வை பொறியாளர் முரளி கூறுகையில்,''காட்டுக்குப்பை பகுதியில் நடந்து வரும் குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக எமரால்டு அணையில் இருந்து இன்று (நேற்று) முதல் ஒரு மாதத்திற்கு, வினாடிக்கு, 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us