sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அனுமதியின்றி வெட்டி கடத்தப்பட்ட 145 மரங்கள்; மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை

/

அனுமதியின்றி வெட்டி கடத்தப்பட்ட 145 மரங்கள்; மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை

அனுமதியின்றி வெட்டி கடத்தப்பட்ட 145 மரங்கள்; மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை

அனுமதியின்றி வெட்டி கடத்தப்பட்ட 145 மரங்கள்; மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை


ADDED : டிச 12, 2024 09:50 PM

Google News

ADDED : டிச 12, 2024 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில், மழை மற்றும் காற்றில் காய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள, மரங்களை வெட்டுவதற்கு வருவாய்த்துறை அனுமதி அளித்து வருகிறது.

தொடர்ந்து, இப்பகுதிகளில் உள்ள மரக்கடத்தல் கும்பல் பட்டா நில உரிமையாளர்களிடம், ஆபத்தான மரங்கள் இருப்பதாக கூறி, வெட்ட அனுமதி பெற்று, கூடுதலான மரங்களை வெட்டி கடத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள்


இந்நிலையில், கையுன்னி அருகே, போத்து கொல்லி பகுதியில் தனியார் பட்டா நிலத்தில் அனுமதி பெறாமல், மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருவதாக, கூடலுார் வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் தலைமையிலான வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வில், 'எவ்வித அனுமதி பெறாமல், 90 ரப்பர் மரங்கள்; 20 சில்வர் ஓக், அயனி; இதர மரங்கள்,' என, மொத்தம், 145 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது. அதில், மரத்துண்டுகளை அந்த பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மர துண்டுகளை பறிமுதல் செய்த வன குழுவினர், வனச்சரகர் அலுவலகத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

மூன்று பேர் மீது வழக்கு பதிவு


இது தொடர்பாக, நில உரிமையாளர் மேரி என்பவரின் மகன் ஜினேஷ்; எருமாடு பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் நபர் நாசர்; கேரளா மாநிலம் சுள்ளியோடு பகுதியைச் சேர்ந்த ஷிஜூ ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

வனச்சரகர் அய்யனார் கூறுகையில், ''அனுமதி இன்றி மரங்கள் வெட்டுவது குறித்து தகவல் கிடைத்தவுடன், நேரில் ஆய்வு செய்து, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மரத்துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவரும் நிலையில், மாவட்ட வன அலுவலர் உத்தரவின் கீழ் மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும்,''என்றார்.-






      Dinamalar
      Follow us