/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 1,762 வழக்கு
/
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக 1,762 வழக்கு
ADDED : ஜன 03, 2025 09:49 PM
ஊட்டி , ; 'நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில், குடிபோதையில் வாகனம் ஓட்டியது; அபாயகரமாக வாகனம் இயக்கியது தொடர்பாக, 1,762 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்பட்டது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி எஸ்.பி., நிஷா நிருபர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில், 89 சதவீதம் குற்ற வழக்குகள் குறைந்துள்ளன. குற்றங்கள் குறித்து, 94 சதவீதம் வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 2024ம் ஆண்டு, 72 பாலியல் குற்ற வழக்குகள் மற்றும் 2 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
3,516 விழிப்புணர்வு முகாம்கள்
பாலியல் குற்றத்தை குறைக்கும் வகையில், 2024ம் ஆண்டு, 3,516 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 17 பாலியல் குற்ற வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அதிகபட்சம், 32 ஆண்டு சிறை தண்டனை இரு வழக்கிலும், மற்றொரு வழக்கில் சாகும் வரை சிறை தண்டனையும் குற்றவாளிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது. கொலை குற்றங்கள் குறித்து, கடந்த ஆண்டு, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை குற்றங்களுக்காக ஒரு வழக்கில், 42 ஆண்டு சிறை தண்டனையும், மற்றொரு வழக்கில், 16 ஆண்டு சிறை தண்டனையும் குற்றவாளிகளுக்கு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
ரூ.16.89 கோடி அபராதம் வசூல்
கடந்த ஆண்டு, 39 மரண வழக்குகளும்,166 சாலை விபத்து வழக்குகளும் பதிவாகியுள்ளன. சாலை விதிகளை மீறியதற்காக, 2024 ம் ஆண்டு வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
அதில், 1,345 வழக்குகள் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காகவும், 1,762 வழக்குகள் அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில்,16.89 கோடி ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
2024 ம் ஆண்டு, 12 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் கல்விப் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில், 'போலீஸ் அக்கா' என்ற பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.