ADDED : ஏப் 08, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2,௦௦௦ டன் நெல் வருகை
ஈரோடு:ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தனி சரக்கு ரயிலில், ௨,௦௦௦ டன் நெல் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு நேற்று வந்தது. சுமை துாக்கும் தொழிலாளர்கள் லாரியில் ஏற்றி, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக மாற்றம் செய்து, மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படும்.

