ADDED : ஏப் 08, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்மாபேட்டையில்25.20 மி.மீ., மழை
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் பல இடங்களில் காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக அம்மாபேட்டையில், 25.20 மி.மீ மழை பதிவானது.
மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-4.20, மொடக்குறிச்சி-3, சத்தி,கொடுமுடி தலா-8, பெருந்துறை-13, சென்னிமலை-3.40, பவானி-20, கவுந்தப்பாடி-15.20, வரட்டுபள்ளம் அணை-12.60, கோபி-5.20, எலந்தகுட்டை மேடு-5, கொடிவேரி-4, குண்டேரிபள்ளம் அணை-21, நம்பியூர்-12, பவானிசாகர்-2.40. மழைக்கு நம்பியூரில் மூன்று குடிசை வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 11 கான்கிரீட் வீடுகளில் சேதம் ஏற்பட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.