/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
26ல் கிராம சபை கூட்டம் அனைவரும் பங்கேற்க அறிவுரை
/
26ல் கிராம சபை கூட்டம் அனைவரும் பங்கேற்க அறிவுரை
ADDED : ஜன 24, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:'வரும், 26ம்தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்,' என, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான வரும், 26ம் தேதி காலை, 10:00 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில், அந்தந்த கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ளது. எனவே, கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

