sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இரு ஆண்டில் ரயில் மோதி 287 பேர் பலி; பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

/

இரு ஆண்டில் ரயில் மோதி 287 பேர் பலி; பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

இரு ஆண்டில் ரயில் மோதி 287 பேர் பலி; பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

இரு ஆண்டில் ரயில் மோதி 287 பேர் பலி; பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவிப்பு


ADDED : பிப் 07, 2024 11:17 PM

Google News

ADDED : பிப் 07, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : பாலக்காடு ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 287 பேர் இறந்துள்ளனர் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலக்காடு ரயில்வே கோட்ட அலுவலகம் அறிக்கையில் கூறியிருப்பது:

பாலக்காடு ரயில்வே பாதுகாப்பு படை ஸ்டேஷன் பகுதிக்குள், 135 பேரும்; சொர்னுர் ஸ்டேஷன் பகுதிக்குள், 152 பேரும் கடந்த இரண்டு ஆண்டுகளில், தண்ட வாளத்தை கடந்த போது, ரயில் மோதி இறந்துள்ளனர்.

பாலக்காட்டில், 39 பேர்; சொர்னுாரில் 133 பேரும் ரயில் மோதி காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் தண்டவாளத்தை கடந்த குற்றத்திற்கு, 346 வழக்குகள் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த குற்றத்துக்கு, 54 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்துகளை குறைக்க ரயில்வேயும், ரயில்வே பாதுகாப்பு படையும் விழிப்புணர்வு முகாம்களை தீவிரப்படுத்தி உள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களிலும், ரயில்களிலும் கூடுதல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. தண்டவாளங்களை கடந்து செல்லும்போது, மொபைல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில் தண்டவாளங்களில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சமூக நலன் கருதி, ரயில் தண்டவாளத்தில் தற்கொலை சம்பவங்களை தவிர்க்க சிறப்பு விழிப்புணர்வு முகாமும் நடத்தப்படுகிறது.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us