sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அனுமதியின்றி கட்டப்பட்ட 3 கடைகளுக்கு 'சீல்'

/

அனுமதியின்றி கட்டப்பட்ட 3 கடைகளுக்கு 'சீல்'

அனுமதியின்றி கட்டப்பட்ட 3 கடைகளுக்கு 'சீல்'

அனுமதியின்றி கட்டப்பட்ட 3 கடைகளுக்கு 'சீல்'


ADDED : நவ 03, 2025 11:30 PM

Google News

ADDED : நவ 03, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: பள்ளிப்படியில் அனுமதியின்றி கட்டப்பட்ட மூன்று கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

கூடலூரில், 'செக் ஷன்-17' அரசு நிலங்களில், புதிய கட்டடங்கள் கட்டவும், அரசு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தடை உள்ளது. பல பகுதிகளில் அனுமதியின்றி புதிய கட்டடங்கள் கட்டுவதாக புகார் எழுந்தது. வருவாய்த் துறையினர், கோழிக்கோடு சாலை நந்தட்டி, செம்பாலா பகுதியில் ஆய்வு செய்து, செக் ஷன்-17 அரசு நிலத்தில் அனுமதியின்றி மேற்கொண்ட கட்டடப் பணிகளை நிறுத்தும்படி கூடலூர் வருவாய் துறையினர் சமீபத்தில் நோட்டீஸ் வழங்கினர்.

தொடர்ந்து, கூடலூர் நகராட்சி ஊழியர்கள், கடந்த வாரம், 7 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

இதனிடையே, 'சீல்' வைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் பாரபட்சம் கட்டியதாக புகார் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன், பள்ளிப்படி பகுதியில், நீரோடையை ஒட்டி அனுமதியின்றி கட்டப்பட்ட மூன்று கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us