/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
36வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா
/
36வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா
ADDED : பிப் 03, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி : கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில், 36 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா கொண்டாடப்பட்டது.
ஊட்டி மண்டல போக்குவரத்து கழக ஓட்டுனர் பயிற்றுனர் சிவக்குமார் தலைமை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை மோட்சா அலங்கார மேரி சாலை பாதுகாப்பின் அவசியம், சாலை விதிகளை மதிப்பது, விபத்து இல்லாத நீலகிரியை உருவாக்குவது, குறித்து பேசினார்.
சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், கோத்தகிரி போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஞான பிரகாஷ் உட்பட போக்குவரத்து அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

