sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேசிய கயிறு இழுக்கும் போட்டி தங்கம் வென்ற 4 மாணவர்கள்

/

தேசிய கயிறு இழுக்கும் போட்டி தங்கம் வென்ற 4 மாணவர்கள்

தேசிய கயிறு இழுக்கும் போட்டி தங்கம் வென்ற 4 மாணவர்கள்

தேசிய கயிறு இழுக்கும் போட்டி தங்கம் வென்ற 4 மாணவர்கள்


ADDED : ஜன 11, 2025 09:54 AM

Google News

ADDED : ஜன 11, 2025 09:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம், முதலமடை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நான்கு பேர், தேசிய கயிறு இழுக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

தேசிய அளவிலான ஜூனியர் கயிறு இழுக்கும் போட்டி, கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை, மகாராஷ்டிரா மாநிலம் பல்காரில் நடந்தது.

இதில், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், முதலமடை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வினு, அக் ஷயா, மிஸ்ரியா, அஜயன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

மாணவி அக் ஷயா, ஜூனியர் 17 மிக்ஸட் போட்டியிலும், மிஸ்ரியாஜூனியர் 19 மிக்ஸட் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றனர். அஜயன் மற்றும் வினு ஜூனியர் 19 ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து உற்சாக வரவேற்பளித்தனர்.

பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், ஆசிரியர்களான ஜாபர்சாதிக், அஜித்குமார், ஆசிபா ஆகியோர் பங்கேற்று பேசினர்.






      Dinamalar
      Follow us