sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்சால் விபத்து காட்டேரி அருகே 42 பயணிகள் காயம்: உயிரை காத்த இரும்பு துாண்

/

கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்சால் விபத்து காட்டேரி அருகே 42 பயணிகள் காயம்: உயிரை காத்த இரும்பு துாண்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்சால் விபத்து காட்டேரி அருகே 42 பயணிகள் காயம்: உயிரை காத்த இரும்பு துாண்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்சால் விபத்து காட்டேரி அருகே 42 பயணிகள் காயம்: உயிரை காத்த இரும்பு துாண்


ADDED : ஜன 28, 2025 07:27 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார: குன்னுார் காட்டேரி அருகே அரசு பஸ், வழிகாட்டி இரும்பு துாணில் மோதிய விபத்தில், 42 பேர் காயமடைந்தனர்.

உட்லேண்டஸ் பகுதியில் இருந்து வந்த அரசு பஸ், நேற்று மதியம் காட்டேரியில் சில பயணிகளை ஏற்றி, 55 பயணிகளுடன் குன்னுாருக்கு புறப்பட்டது. 100 மீட்டர் துாரம் செல்வதற்குள், திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், வலதுபுறமுள்ள நெடுஞ்சாலை துறை வழிகாட்டி இரும்பு துாணில், மோதி விபத்துக்குள்ளானது.

அதில், 42 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. டிரைவர் மனோஜ்,50, செல்வராஜ்,54, மூர்த்தி,58, கலைசெல்வன்,48, மகேஷ்,48, ஜெயராம், 62, ஆசாகுமாரி, மலர்,58,சசிகலா,48, விஜயலட்சுமி,53 உட்பட, 42 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் குன்னுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

போலீசார் கூறுகையில்,'பஸ்சில் திடீரென ஸ்டேரிங்லாக் ஆனதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. டிரைவர் இதுவரை வேறு எந்த சிறு விபத்துகளும் ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. அப்பகுதியில் வழிகாட்டி துாண் இல்லையெனில், 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்திருக்கும், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்,'என்றனர்.

பயணிகள் கூறுகையில், 'நீலகிரியில் பெரும்பாலான அரசு பஸ்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால், ஆங்காங்கே பழுதடைந்து நிற்பது அதிகரித்து வருகிறது. மலை பகுதி என்பதால், இங்குள்ள பழமையான பஸ்களை மாற்றி, புதிய பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

'ஸ்கேன்' எடுக்க பணம் வசூல்?

பஸ் விபத்தில் பலருக்கும், கால், கைகளில் காயமடைந்த நிலையில், எம்.ஆர்.ஐ., உட்பட ஸ்கேன் எடுக்க காயமடைந்தவர்கள் சென்றுள்ளனர். அங்கு ஒருவருக்கு, 500 ரூபாய் வீதம் கேட்டதால், காயமடைந்தவர்களின் உடன் வந்தவர்கள் மற்றும் பஸ்சில் வந்த பயணிகள், மருத்துவமனை வளாகத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து பிரச்னைக்கு தீர்வு காணப்படும். அனைவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனர்.








      Dinamalar
      Follow us