/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று
/
நீலகிரியில் 5 பேருக்கு கொரோனா தொற்று
ADDED : ஜன 03, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;நீலகிரியில், 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு சளி, காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி கலெக்டர் அருணா கூறுகையில்,''நீலகிரியில், 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். மாநில எல்லைகளில் வாகனங்களில் வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்தி பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்,'' என்றார்.