sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

60 'சிம்' கார்டு பதிவுகள் குஜராத்தில் ஆய்வு

/

60 'சிம்' கார்டு பதிவுகள் குஜராத்தில் ஆய்வு

60 'சிம்' கார்டு பதிவுகள் குஜராத்தில் ஆய்வு

60 'சிம்' கார்டு பதிவுகள் குஜராத்தில் ஆய்வு


ADDED : ஜன 06, 2024 12:02 AM

Google News

ADDED : ஜன 06, 2024 12:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:'கோடநாடு வழக்கில், 19 மொபைல் போன் டவர்கள், 60 'சிம் கார்டு' பதிவுகள் குஜராத் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன' என, அரசு வக்கீல் கூறினார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

நேற்று, சி.பி.சி.ஐ.டி., - ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையில் போலீசார் மற்றும் அரசு தரப்பு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் கோர்ட்டில் ஆஜராகினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகியோர் ஆஜராகினர். வழக்கு செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடந்தது.

விசாரணைக்கு பின், அரசு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், ''கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, ஜம்சீர் அலி ஆகியோரின், 8 மொபைல் போன் உரையாடல்களை கொண்டு சேகரிக்கப்பட்ட அறிக்கையை படிப்பதுடன், மேலும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

''அரசு தரப்பு மூலம் இவ்வழக்கு சம்மந்தமாக, கோவை ஆய்வகத்திற்கு அனுப்பபட்ட ரெக்கவரி செய்யப்பட்ட ஆய்வறிக்கையை வழங்கினால் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.

வழக்கு தொடர்பாக, 19 மொபைல் போன் டவர்கள் மற்றும் 60 சிம்கார்டு பதிவுகள் குஜராத் ஆய்வகத்திற்கு கோர்ட் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை கிடைத்தவுடன் அதனடிப்படையில் விசாரணை விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.

வழக்கை நீதிபதி அப்துல் காதர், பிப்., 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us