sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

/

சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது


ADDED : டிச 22, 2024 10:39 PM

Google News

ADDED : டிச 22, 2024 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: கூடலூர், ஓவேலி அருகே, கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி பெரிய சூண்டி பகுதியில், சண்டை சேவல்களை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில், நியூஹோப் எஸ்.ஐ., குமரன், கணேசன் போலீசார் நேற்று, அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், கார்த்திக் என்பவரின் மாமியார் வீட்டில் அருகே, 4 சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.இது தொடர்பாக, பெரியசூண்டி மற்றும் கர்நாடகா நஞ்சன்கோடு பகுதியை சேர்ந்த வாசிம், 38, இர்பான், 34, சேது, 38,ஜீவா,23,அகமது, 27, தசரத்துல்லா, 26,கார்த்திக், 30, யோகேந்திரன், 22, ஆகியோரை கைது செய்து, சூதாட பயன்படுத்திய நான்கு சேவல்களையும், 5900 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us