sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி பலி 

/

சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி பலி 

சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி பலி 

சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுமி பலி 


ADDED : அக் 19, 2024 09:52 PM

Google News

ADDED : அக் 19, 2024 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை அருகே, ஊசிமலை மட்டம் எஸ்டேட் உள்ளது. இங்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அய்னுார் அன்சாரி, நசீரன்கத்துான் தம்பதி குடும்பத்துடன் தங்கி பணியாற்றினர். இவர்கள் மகள் அப்சர்கத்துான், 4, நேற்று மதியம், 2:30 மணிக்கு வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை, சிறுமியை கவ்விச் சென்றது.

குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த தொழிலாளர்கள், தேயிலை செடிக்குள் குழந்தையை தேடினர். அப்போது, கழுத்துப் பகுதியில் காயத்துடன் குழந்தை இறந்து கிடந்தது. குழந்தையின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வனத்துறையினர், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறுத்தையை பிடிக்க வனத்துறை சிறப்புக்குழுவை நியமித்துள்ளது.






      Dinamalar
      Follow us