sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கர்நாடக அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்; டிரைவர் மீது வழக்கு பதிவு

/

கர்நாடக அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்; டிரைவர் மீது வழக்கு பதிவு

கர்நாடக அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்; டிரைவர் மீது வழக்கு பதிவு

கர்நாடக அரசு பஸ்சில் புகையிலை பறிமுதல்; டிரைவர் மீது வழக்கு பதிவு


ADDED : மார் 07, 2024 11:53 AM

Google News

ADDED : மார் 07, 2024 11:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:தமிழக - கர்நாடக எல்லையான, முதுமலை கக்கனல்லா சோதனை சாவடி வழியாக புகையிலை மற்றும் போதை பொருள்கள் கடத்துவதை தடுக்க, போலீசார் வாகன சோதனையை தீவிரப் படுத்தி உள்ளனர்.

நேற்று காலை எஸ்.எஸ்.ஐ., ஜேசுமரியான் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். மைசூரில் இருந்து, ஊட்டி செல்லும் கர்நாடக அரசு பஸ்சில், மேற்கொண்ட சோதனையில், கடத்தி வந்த தடை செய்யப்பட்ட, புகையிலை 15 பாக்கெட்கள் கொண்ட, 50 பண்டல்களை ஒரு மூட்டையில் கடத்தி வருவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

அதனை யாரும் உரிமை கோராத நிலையில் மேல்விசாரணைக்காக, அரசு பஸ்சுடன், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மசினகுடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மசினகுடி போலீசார், பஸ் டிரைவர் சதீஷ்குமாரிடம் மேற்கொண்டு விசாரணையில், 'காலை, 7:00 மணிக்கு மைசூரில் இருந்து, ஊட்டிக்கு புறப்பட்ட, பஸ் பல இடங்களில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி வந்ததுள்ளார். ஓட்டுனர், நடத்துனர் பணியை மேற்கொண்டதால், புகையிலை பொருட்களை யார், எங்கு ஏற்றினார்கள் என்பது தெரியாது,' என, கூறியுள்ளார்.

புகையிலை பொருட்களை யாரும் உரிமை கூறாத நிலையில், அதனை ஏற்றி வந்தது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, பஸ் டிரைவர் சதீஷ்குமாரை, 35, கைது செய்து, ஸ்டேஷன் ஜாமினில் விடுவித்தனர். தொடர்ந்து, பஸ் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.






      Dinamalar
      Follow us