sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஜனாதிபதி செல்லும் சாலையில் புகுந்த பசுமாடு; விரட்ட ஓடிய போக்குவரத்து போலீசார் 'டென்ஷன்'

/

ஜனாதிபதி செல்லும் சாலையில் புகுந்த பசுமாடு; விரட்ட ஓடிய போக்குவரத்து போலீசார் 'டென்ஷன்'

ஜனாதிபதி செல்லும் சாலையில் புகுந்த பசுமாடு; விரட்ட ஓடிய போக்குவரத்து போலீசார் 'டென்ஷன்'

ஜனாதிபதி செல்லும் சாலையில் புகுந்த பசுமாடு; விரட்ட ஓடிய போக்குவரத்து போலீசார் 'டென்ஷன்'


ADDED : நவ 28, 2024 11:52 PM

Google News

ADDED : நவ 28, 2024 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; ஜனாதிபதி செல்லும் சாலையில் திடீரென புகுந்த பசுமாடால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு நான்கு நாள் சுற்று பயணமாக ஊட்டி வந்து, ராஜ் பவனில் தங்கியுள்ளார். நேற்று, குன்னுார் ராணுவ பயிற்சி கல்லுாரி நிகழ்ச்சியில் பங்கேற்க காலை, 11:00 மணிக்கு ராஜ் பவனிலிருந்து காரில் புறப்பட இருந்தார்.

இதன் காரணமாக, கான்வாயில் ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜனாதிபதி செல்வதற்கு முன்பு, அரை மணி நேரத்திற்கு முன்னதாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையோரத்தில் நடந்து சென்றவர்களை நடைப் பாதையில் நடந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அப்போது, திடீரென தலையாட்டி மந்தில் திடீரென சாலை நடுவே வந்த பசுமாடு ஆவின் பஸ் ஸ்டாப் வரை அங்கும், இங்குமாக ஓடியது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பசுமாட்டை பிடிக்க ஓடினர். பிடிக்க முடியவில்லை. பைக்கில் சென்று போலீசார் பிடிக்க முற்பட்டனர். பின் , நகராட்சி ஊழியர்கள் வந்து பசு மாட்டை பிடித்து சென்ற பின், போலீசார் நிம்மதியடைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us