/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண்டல பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
மண்டல பூஜையில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : ஜன 03, 2025 09:53 PM
கோத்தகிரி,; கோத்தகிரி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், 44ம் நாள் மண்டல பூஜையில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோத்தகிரி பஜார் பகுதியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவிலில், நவ., 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்து. தொடர்ந்து, மண்டல பூஜை நடந்து வருகிறது.
பல்வேறு சமுதாயத்தினர் மற்றும் தனியார் சார்பில், அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார பூஜை நடந்து வருகிறது. ஆன்மீக சொற்பொழிவு பஜனை இடம்பெறுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
அதன்படி, 44 வது நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. அதிகாலை முதல், அம்மனுக்கு சிறப்பு அலங்கார மலர் வழிபாடு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோத்தகிரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.