/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மே 12, 2025 10:57 PM

கூடலுார், ; மசினகுடி துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
முதுமலை அருகே, மசினகுடி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா, 2ம் தேதி காலை, 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
9ம் தேதி காலை, 9:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, புண்ணியாக வாசனம், சுவாமி உத்தரவு பெறுதல், மஹா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை நிகழ்ச்சிகள் நடந்தது.
மாலை, 4:00 மணிக்கு தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சியும், 6:30 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி பூஜை நடந்தது.
10ம் தேதி காலை, 9:00 மணிக்கு நவ துர்கா கலச பூஜை, துர்கா சகஸ்ரநாம பாராயணம், சிறப்பு வழிபாடு நிகழ்ச்சிகளும், மதியம் கோபுர கலசம் நிலை நிறுத்துதல், எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை, இரண்டாம் கால பூஜை, வேதிகை அர்ச்சனை, நாடி சந்தானம், கடகம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.