/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரும்பு பாலம் பகுதியில் முகாமிட்டுள்ள சிறுத்தை
/
இரும்பு பாலம் பகுதியில் முகாமிட்டுள்ள சிறுத்தை
ADDED : ஜன 08, 2026 05:22 AM
பந்தலுார்: பந்தலுார் பஜாரை ஒட்டிய இரும்பு பாலம், குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பந்தலுார் பஜாரை ஒட்டி இரும்பு பாலம் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ள, இந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சிறுத்தை ஒன்று வேலியில் சிக்கி மீட்கப்பட்டது. இந்நிலையில், அதே பகுதியில் மற்றொரு சிறுத்தை, கடந்த சில வாரங்களாக முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இரவு நேரங்களில் மட்டுமே வந்த சிறுத்தை தற்போது, பகல் நேரத்திலும் ஊருக்குள் வருவதால், பள்ளி சென்று திரும்பும் குழந்தைகள் மற்றும் மக்கள் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர்.
எனவே, இந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டில் விட நட வடிக்கை எடுக்க வேண்டும்.

