sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வீட்டுக்குள் வந்த சிறுத்தை; உயிர் தப்பிய வளர்ப்பு நாய்

/

வீட்டுக்குள் வந்த சிறுத்தை; உயிர் தப்பிய வளர்ப்பு நாய்

வீட்டுக்குள் வந்த சிறுத்தை; உயிர் தப்பிய வளர்ப்பு நாய்

வீட்டுக்குள் வந்த சிறுத்தை; உயிர் தப்பிய வளர்ப்பு நாய்


ADDED : அக் 18, 2024 10:45 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள மஞ்சனக்கொரை பகுதியில் தேயிலை தோட்டங்கள், வனப்பகுதிகள் அதிகமாக உள்ளதால், சிறுத்தை, காட்டெருமை போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

இந்நிலையில், ஊட்டி மஞ்சனக்கொரை கலைஞர் காலனியில் நேற்று முன்தினம் இரவு உலா வந்த சிறுத்தை, வீட்டின் தடுப்பு சுவர் மீது ஏறி அமர்ந்தது. சரியான தருணத்தில் பாய்ந்து சென்று அங்கு உறங்கி கொண்டிருந்த நாயின் கழுத்தை கவ்வி துாக்கியது.

அப்போது, அவ்வழியாக வாகனம் வந்ததால் அந்த சப்தம் கேட்டு நாயை விட்டு சென்றது.

காயமடைந்த நாய் வலி தாங்காமல் மெதுவாக எழுந்து தள்ளாடி வீட்டிற்குள் நடந்து சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்கள் மூலம் வைரலாகி வருகிறது.

இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அங்கு வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

மக்கள் கூறுகையில்,'இரவில் சிறுத்தை வீட்டுக்குள் வருவதால், அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us