/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கல்லுாரி சாலையில் அரிவாளுடன் வந்த நபரால் பரபரப்பு
/
கல்லுாரி சாலையில் அரிவாளுடன் வந்த நபரால் பரபரப்பு
ADDED : செப் 01, 2025 07:34 PM
ஊட்டி:
ஊட்டி அரசு கலை கல்லுாரி சாலையில் தகராறில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஊட்டி அரசு கலை கல்லுாரியில் இளங்கலை, முதுகலை பாடப்பிரிவில், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இக்கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களிடையே கடந்த வாரம் அரசு கல்லுாரி மைதானத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பி.காம்., முதலாம் ஆண்டு படிக்கும் மாணவருடன், இரண்டாம் ஆண்டு மாணவர் தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில், பி.காம்., மாணவர், 10 நபர்களுடன் நேற்று கல்லுாரிக்கு வந்து, மதுரை மாவட்டத்தை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவரிடம் தகராறு செய்துள்ளார். அந்த மாணவர் ஊட்டியில் உள்ள தனது சகோதரனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக மாணவரின் சகோதரர் அரிவாளுடன் கல்லுாரி சாலையில் வந்துள்ளார். இதை பார்த்த பிற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை தடுத்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். பி------1 இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அரிவாளுடன் அங்கு வந்த நபர் போலீசை பார்த்ததும் தப்பியோடிவிட்டார். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஊட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.