sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஏல விற்பனையில் மந்தம்; 13 லட்சம் கிலோ தேயிலை தேக்கம்; ஒரே வாரத்தில் ரூ.4.60 கோடி சரிவு

/

ஏல விற்பனையில் மந்தம்; 13 லட்சம் கிலோ தேயிலை தேக்கம்; ஒரே வாரத்தில் ரூ.4.60 கோடி சரிவு

ஏல விற்பனையில் மந்தம்; 13 லட்சம் கிலோ தேயிலை தேக்கம்; ஒரே வாரத்தில் ரூ.4.60 கோடி சரிவு

ஏல விற்பனையில் மந்தம்; 13 லட்சம் கிலோ தேயிலை தேக்கம்; ஒரே வாரத்தில் ரூ.4.60 கோடி சரிவு


ADDED : அக் 21, 2024 11:10 PM

Google News

ADDED : அக் 21, 2024 11:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார் : குன்னுார் தேயிலை ஏலத்தில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டு, 13 லட்சம் கிலோ துாள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது.

குன்னுார் ஏல மையத்தில், 42வது ஏலம் நடந்தது. அதில், '23.93 லட்சம் இலை ரகம்; 5.91 லட்சம் டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 29.84 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. அதில், '14.04 லட்சம் கிலோ இலை ரகம்; 2.81 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 16.85 லட்சம் கிலோ விற்றது.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் விற்பனை மற்றும் விலையில் ஏறுமுகமாக இருந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக திடீரென விற்பனையிலும், விலையிலும் சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்த ஏலத்தில், 41.38 சதவீதம் இலை ரகம்; 52.54 சதவீதம் டஸ்ட் ரகம் தேக்கமடைந்தது. மொத்த வருமானம், 25.86 கோடி ரூபாய் கிடைத்தது.

சராசரி விலை கிலோவுக்கு, 153.49 ரூபாயாக இருந்தது. ஒரே வாரத்தில், 13 லட்சம் கிலோ தேக்கம் அடைந்ததுடன், 4.26 கோடி ரூபாய் மொத்த வருமானமும் சரிந்தது. கடந்த ஏலத்தை விட சராசரி விலை கிலோவிற்கு, 4.63 ரூபாய் குறைந்தது.

தென் மாநில ஏலங்களில் விற்பனையும், விலையும் திடீரென சரிந்து வருவது விவசாயிகள், வர்த்தகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏலதாரர்கள் கூறுகையில்,'தேயிலை வரத்து வழக்கத்தை விட அதிகரித்ததாலும், தசரா உட்பட தொடர் விடுமுறையால் ஏலம் எடுக்க யாரும் ஆர்வம் காட்டாததாலும் தேயிலை துாள் விற்பனையாகாமல் தேக்கம் கண்டது,' என்றனர்.






      Dinamalar
      Follow us