/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினர் வீட்டில் நுழைந்த சாரை பாம்பு
/
பழங்குடியினர் வீட்டில் நுழைந்த சாரை பாம்பு
ADDED : மார் 18, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கூடலுார் அருகே, பழங்குடியினர் வீட்டில் நுழைந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் தேடி பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கூடலுார் ஏழுமரம் பகுதியைசேர்ந்த தினேஷ் என்பவரின் வீட்டில் நேற்று பாம்பு ஒன்று நுழைந்தது. அதனை அறிந்த பழங்குடியின மக்கள், கூடலுார் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று ஒரு மணி நேரம் போராடி, நான்கு அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர். அதன் பின்பு பழங்குடியினர் நிம்மதி அடைந்தனர். பிடிக்கப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வனத்துறையினர் அதனை வனப்பகுதியில் விடுவித்தனர்.

