sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

பெயரளவுக்கு நடத்தப்படும் சிறப்பு முகாம்

/

பெயரளவுக்கு நடத்தப்படும் சிறப்பு முகாம்

பெயரளவுக்கு நடத்தப்படும் சிறப்பு முகாம்

பெயரளவுக்கு நடத்தப்படும் சிறப்பு முகாம்


ADDED : ஜூலை 07, 2025 08:10 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; மாநில அரசின் சார்பில், தொல் பழங்குடியினருக்கான, சிறப்பு முகாம்கள் ஒவ்வொரு பழங்குடியின கிராமங்களிலும் நடத்தப்படுகின்றன.

இந்த முகாம்களில் அனைத்து விதமான சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டைகள் விண்ணப்பம் மற்றும் திருத்தம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், பழங்குடியினர் கிராமங்களை ஒட்டி அரசு பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் 'நெட்வொர்க்' சேவை இல்லாததால், ஆதார் அட்டைகள் பதிவேற்றம் செய்தல் மற்றும் திருத்தங்கள் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், முகாமுக்கு செல்லும் பழங்குடியின பயனாளிகள், ஏமாற்றத்துடன் திரும்பி வருவது அதிகரித்து வருகிறது.

பழங்குடியின மக்கள் கூறுகையில், 'தினசரி கூலி வேலை செய்து, பிழைப்பு நடத்தி வருகிறோம். அரசு அறிவிக்கும் இது போன்ற முகாம்களில், எங்களுக்கு ஏதாவது பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செல்லும் நிலையில், ஏமாற்றத்துடன் திரும்பி வருவதால் ஒருநாள் கூலியும் வீணாகி வருகிறது. எனவே, இனிவரும் காலங்களில், 'நெட்வொர்க்' இல்லாத பகுதிகளில் நடக்கும் இது போன்ற அரசு முகாம்களுக்கு பழங்குடியின மக்கள் செல்வதில்லை என முடிவு செய்துள்ளோம். இதனை தடுக்க முன் ஏற்பாடுகளுடன் முகாம்களை நடந்த வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us