sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆகாசபாலம் பகுதி பள்ளத்தில் கவிழந்த சுற்றுலா வாகனம்

/

ஆகாசபாலம் பகுதி பள்ளத்தில் கவிழந்த சுற்றுலா வாகனம்

ஆகாசபாலம் பகுதி பள்ளத்தில் கவிழந்த சுற்றுலா வாகனம்

ஆகாசபாலம் பகுதி பள்ளத்தில் கவிழந்த சுற்றுலா வாகனம்


ADDED : நவ 22, 2024 11:25 PM

Google News

ADDED : நவ 22, 2024 11:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: நடுவட்டம், ஆகாசபாலம் அருகே, சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்தில், எட்டு பேர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம், சிக்கால்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 16 பேர், 'டெம்போ' வாகனத்தில், 16ம் தேதி சபரிமலைக்கு சென்றுள்ளனர். தரிசனத்தை முடித்துவிட்டு, விரதத்தை முடித்துள்ளனர். தொடர்ந்து, 19ம் தேதி கன்னியாகுமரி வந்த இவர்கள், அங்கிருந்து ராமேஸ்வரம், பழனி கோவில்களுக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் ஊட்டி வந்துள்ளனர்.

ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு, கர்நாடகா செல்வதற்காக, கூடலுார் நோக்கி வந்தனர். ஆகாசபாலம் அருகே, இவர்கள் வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில், சிக்கலாபூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், 35, சீனிவாஸ், 25, நாகராஜ், 37, நாசிமுத்து, 31, ஆதிநாராயணன், 28 உட்பட எட்டு பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நடுவட்டம் எஸ்.ஐ., குணசேகரன் விசாரணை மேற்கொண்டார்.






      Dinamalar
      Follow us