sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேசிய நெடுஞ்சாலை ஓரம் பகலில் முகாமிட்ட காட்டு யானை

/

தேசிய நெடுஞ்சாலை ஓரம் பகலில் முகாமிட்ட காட்டு யானை

தேசிய நெடுஞ்சாலை ஓரம் பகலில் முகாமிட்ட காட்டு யானை

தேசிய நெடுஞ்சாலை ஓரம் பகலில் முகாமிட்ட காட்டு யானை


ADDED : அக் 22, 2024 11:47 PM

Google News

ADDED : அக் 22, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் ; கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரம் காட்டு யானை முகாமிட்டதால், ஓட்டுனர்கள் அச்சமடைந்தனர்.

கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஹெல்த்கேம் அருகே தனியார் இடத்தில் காட்டு யானை ஒன்று கடந்த ஒரு வாரமாக முகாமிட்டுள்ளது. இந்த யானை இரவு நேரங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு ஹெல்த்கேம்ப் போஸ்ட் ஆபீஸ் அருகே, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரம் யானை முகாமிட்டது. இதனால், ஓட்டுனர்கள் அச்சத்துடன் பகுதியை கடந்து சென்றனர். சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி யானையை பார்க்க துவங்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதி இளைஞர்கள், சப்தமிட்டு யானையை விரட்டினர். யானை தனியார் இடத்தில் சென்று முகாமிட்டது. தகவல் அறிந்து வந்த வன ஊழியர்கள் அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூறுகையில், 'பகலில் நகரை ஒட்டிய தனியார் இடத்தில் முகாமிடும் யானை, இரவில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து அச்சுறுத்தி வருகிறது. மேலும் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்வதால், அவ்வழியாக பயணிக்கும் வாகனங்களையும் தாக்கும் ஆபத்து உள்ளது. எனவே, யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us