/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆடி வெள்ளி; அம்மனுக்கு வெற்றிலையில் அலங்காரம்
/
ஆடி வெள்ளி; அம்மனுக்கு வெற்றிலையில் அலங்காரம்
ADDED : ஆக 01, 2025 07:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; மேல்கூடலுார் சந்தை கடை மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.
மேல்கூடலூர் சந்தை கடைமாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மூன்றாவது வாரமான, நேற்று, ஆடி வெள்ளி முன்னிட்டு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது.
அம்மன், வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. குழந்தைகள், பெண்கள் பெருமளவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். பத்தர்களுக்கு, பிரசாதமாக புளியோதரை, கேழ்வரகு கூழ் வழங்கப்பட்டது.