sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மொத்தமாக சிலிண்டர்கள் கண்டறிப்பட்டால் நடவடிக்கை : வருவாய் அலுவலர் எச்சரிக்கை

/

மொத்தமாக சிலிண்டர்கள் கண்டறிப்பட்டால் நடவடிக்கை : வருவாய் அலுவலர் எச்சரிக்கை

மொத்தமாக சிலிண்டர்கள் கண்டறிப்பட்டால் நடவடிக்கை : வருவாய் அலுவலர் எச்சரிக்கை

மொத்தமாக சிலிண்டர்கள் கண்டறிப்பட்டால் நடவடிக்கை : வருவாய் அலுவலர் எச்சரிக்கை


ADDED : பிப் 14, 2025 09:47 PM

Google News

ADDED : பிப் 14, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:

'சாலையோரங்கள், சில குறிப்பிட்ட இடங்களில் மொத்தமாக சிலிண்டர்கள் இறக்கி வைப்பது கண்டறிப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஊட்டி கூடுதல் கலெக்டர் கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், 'எரிவாயு கூட்டங்கள் வட்ட அளவில் தொடர்ந்து நடத்த வேண்டும்; எரிவாயு சிலிண்டர்கள் வீடுகளில் வினியோகம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்; சாலைகளில் இறக்கி வைக்கப்படும் சிலிண்டர்கள்; அல்லது சில இடங்களில் மொத்தமாக இறக்கி வைப்பது போன்றவை முறைகேட்டிற்கு வழிவகுக்கும் இவற்றை தவிர்க்க வேண்டும்; கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்; நுகர்வோர் விருப்பத்திற்கு ஏற்ப முகவர்கள் மாற்றி கொள்ள காலதாமதம் செய்யாமல் மாற்றி கொடுக்க வேண்டும்,' என்பன. உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பேசுகையில், ''நுகர்வோர் குறைகளை களையும் வகையில் அனைத்து வட்டங்களிலும் எரிவாயு முகவர்களுடன் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க செய்ய வேண்டும். சாலையோரங்கள், சில குறிப்பிட்ட இடங்களில் மொத்தமாக சிலிண்டர்கள் இறக்கி வைப்பது முற்றிலும் தவறு. எரிவாயு வாடிக்கையாளர்கள் விண்ணப்பம் கொடுத்தால் விரைவில் முகவர்கள் மாற்றிக் கொடுக்க வேண்டும்,''என்றார்.

மனிதவள மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us