sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையோரம் தொழிற்சங்க அலுவலகம் அமைக்க நடவடிக்கை: அ.தி.மு.க., எதிர்ப்பு

/

சாலையோரம் தொழிற்சங்க அலுவலகம் அமைக்க நடவடிக்கை: அ.தி.மு.க., எதிர்ப்பு

சாலையோரம் தொழிற்சங்க அலுவலகம் அமைக்க நடவடிக்கை: அ.தி.மு.க., எதிர்ப்பு

சாலையோரம் தொழிற்சங்க அலுவலகம் அமைக்க நடவடிக்கை: அ.தி.மு.க., எதிர்ப்பு


ADDED : செப் 25, 2024 09:07 PM

Google News

ADDED : செப் 25, 2024 09:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலையோரத்தை ஆக்கிரமித்து, தி.மு.க., தொழிற்சங்கமான, எல்.பி.எப்., அலுவலகம் அமைக்கும் பணிக்கு, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அ.தி.மு.க., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அப்போது, பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தி.மு.க., தொழிற் சங்கமான எல்.பி.எப்., சார்பில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், அலுவலகம் கட்டுவது குறித்து அ.தி.மு.க.,வினருக்கு தெரியவந்தது. தொடர்ந்து, மாவட்ட செயலாளர் வினோத், நகர செயலாளர் அனுப்கான் மற்றும் அ.தி.மு.க.,வினர் அப்பகுதிக்கு சென்று, எல்.பி.எப்., தொழிற்சங்க அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அதனை அகற்ற வலியுறுத்தினார்.

நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, புகார் தெரிவித்தனர். அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், அ.தி.மு.க.,வினர் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us