/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையை கடக்கும் யானைகளுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை
/
சாலையை கடக்கும் யானைகளுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை
சாலையை கடக்கும் யானைகளுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை
சாலையை கடக்கும் யானைகளுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை
ADDED : ஏப் 29, 2025 09:06 PM

கூடலுார்; 'முதுமலையில், உணவு, குடிநீருக்காக சாலையை கடந்து செல்லும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்,' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதிகள் வறட்சி நீங்கி பசுமைக்கு மாறியுள்ளன. தொடர்ந்து, வன விலங்குகள் சாலையோரங்களில் மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. அவைகளால் ஆபத்து ஏற்படும் என்பதால், இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகள் அருகே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்த கூடாது; வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது வாகனங்களை நிறுத்தி, பயணத்தை தொடர வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், சில சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையை மீறி, வனவிலங்குகள் அருகே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். மேலும், வனவிலங்கு சாலையை கடக்கும் போது அதன் அருகே வாகனங்கள் நிறுத்தி கோபத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனால், குறிப்பாக யானைகள் வாகனங்களை தாக்கும் ஆபத்து உள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், 'இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள், சாலையோரம் மேய்ச்சலில் ஈடுபடும் வனவிலங்குகள், சாலையை கடக்கும் விலங்குகள் அருகே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தினால், அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

