sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'தற்போது விஜயகாந்த் இருந்திருந்தால் அரசியல் களம் வேறுமாதிரி இருந்திருக்கும்' : ஊட்டியில் நடிகர் விஷால் கருத்து

/

'தற்போது விஜயகாந்த் இருந்திருந்தால் அரசியல் களம் வேறுமாதிரி இருந்திருக்கும்' : ஊட்டியில் நடிகர் விஷால் கருத்து

'தற்போது விஜயகாந்த் இருந்திருந்தால் அரசியல் களம் வேறுமாதிரி இருந்திருக்கும்' : ஊட்டியில் நடிகர் விஷால் கருத்து

'தற்போது விஜயகாந்த் இருந்திருந்தால் அரசியல் களம் வேறுமாதிரி இருந்திருக்கும்' : ஊட்டியில் நடிகர் விஷால் கருத்து


ADDED : ஆக 25, 2025 11:39 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:

''இன்றைய அரசியலில் விஜயகாந்த் இருந்திருந்தால், 2026 அரசியல் களம் வேறுமாதிரி இருந்திருக்கும்,''என, நடிகர் விஷால் கூறினார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே கேத்தி பகுதியில் விஷால் நடிக்கும் மகுடம் படப்பிடிப்பு நேற்று நடந்தது. அதில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மலர் துாவி நடிகர் விஷால் மரியாதை செலுத்தினார்.

அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் மறக்க முடியாத மனிதர். அவர் எந்த துறைக்கு சென்றாலும் முன்னுதாரணமாக இருந்தவர். இன்றைய அரசியலில் விஜயகாந்த் இருந்திருந்தால், 2026 அரசியல் களம் வேறுமாதிரி இருந்திருக்கும். நடிகர் சங்க கட்டடம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செப்., அல்லது அக்., மாதத்தில் திறப்பு விழாவிற்கு தயாராகி விடும்.

மாநில அரசு, 5 கோடி ரூபாய் மதிப்பில், திறந்து வைத்துள்ள படபிடிப்பு தளம் வரவேற்கதக்கது. விஜய் அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துகள்.

நல்லது செய்வது தான் அரசியல் என்றால், நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us