sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

போதை காளான் விபரீதம்; கல்லூரி மாணவி மரணம்

/

போதை காளான் விபரீதம்; கல்லூரி மாணவி மரணம்

போதை காளான் விபரீதம்; கல்லூரி மாணவி மரணம்

போதை காளான் விபரீதம்; கல்லூரி மாணவி மரணம்


ADDED : பிப் 12, 2024 11:39 PM

Google News

ADDED : பிப் 12, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே பாம்பேகேசில் 20 வயது வாலிபர், கேத்தி தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படிக்கிறார்.

ஊட்டி, பிங்கர்போஸ்ட் பகுதி, 19 வயது மாணவி, கோவை தனியார் கல்லுாரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்தார். இருவரும் பள்ளி நண்பர்கள். சில ஆண்டுகளாக காதலித்தனர்.

வார விடுமுறையை ஒட்டி, 10ம் தேதி மாணவியை தன் வீட்டுக்கு மாணவர் அழைத்து வந்துள்ளார். இருவரும் மது அருந்தி உள்ளனர்.

பின், மாணவர் கொண்டு வந்த போதை காளானை இருவரும் உட்கொண்டுள்ளனர். போதை அதிகமாகி மாணவி மூச்சுத்திணறி இறந்துள்ளார்.

போதை தெளிந்த பின், மாணவி இறந்து கிடப்பதை பார்த்த மாணவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளார். மருத்துவ ஊழியர்கள் பரிசோதித்ததில் மாணவி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

போலீசார் சோதனையிட்டதில், மதுபாட்டில்கள், போதை காளான்கள் சிக்கின. தொடர்ந்து, அந்த மாணவர் கைது செய்யப்பட்டார். விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us