sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பதிவேற்றம் :பணியில் கூடுதல் பணியாளர்கள் நியமனம்

/

 எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பதிவேற்றம் :பணியில் கூடுதல் பணியாளர்கள் நியமனம்

 எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பதிவேற்றம் :பணியில் கூடுதல் பணியாளர்கள் நியமனம்

 எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பதிவேற்றம் :பணியில் கூடுதல் பணியாளர்கள் நியமனம்


ADDED : நவ 20, 2025 05:35 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்: எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதில், கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.

தேர்தல் ஆணையம் சார்பில், வாக்காளர்களுக்கு, சிறப்பு தீவிர திருத்த விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, தற்போது பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதில், தமிழக எல்லை பகுதியாக உள்ள பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் உள்ளனர்.

இவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்கள் வழங்குவதுடன், விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது குறித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.தாசில்தார் சிராஜூநிஷா தலைமையில் அலுவலகத் தில் கூடுதலாக தற்காலிக, பணியாளர்கள் நியமிக்கப்பட்டு விண்ணப்பங்கள் அனைத்தும், உடனுக்குடன் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கூறுகையில், 'தற்காலிக பணியாளர்கள் மூலம் பதிவேற்றம் செய்யும் விபரங்கள், எந்த தவறுகளும் இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். அவசர கதியில் பதிவேற்றம் செய்தால், புகைப்படம் மற்றும் முகவரி, பெயர்கள் தவறுதலாக மாறி, நாங்கள் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us