sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மான் வேட்டையில் கைதான பழங்குடியின வாலிபர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு

/

மான் வேட்டையில் கைதான பழங்குடியின வாலிபர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு

மான் வேட்டையில் கைதான பழங்குடியின வாலிபர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு

மான் வேட்டையில் கைதான பழங்குடியின வாலிபர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு


ADDED : பிப் 10, 2025 06:38 AM

Google News

ADDED : பிப் 10, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : மான் வேட்டையில் கைதான பழங்குடியின வாலிபர்களை வனத்துறையினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோத்தகிரி அடுத்த கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கூக்கல்தொரை பகுதியில் கடமான் வேட்டையாடப்பட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர், அந்த பகுதிக்கு சென்று கடமான் இறைச்சியை காய வைத்துக் கொண்டிருந்த, 3 பேரை கைது செய்தனர். வேட்டையாட பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், 26, குமார், 27, பிரகாஷ், 30, ஆகியோர் சுருக்கு கம்பி வைத்து மான் வேட்டையாடியது தெரியவந்தது. கைதான சதீஷ்குமார், குமார் ஆகியோர் இருளர் பழங்குடியினர் என்பதும், கூலி வேலைக்காக இங்கு வந்து தங்கி இருப்பதும் தெரியவந்தது.

மான் வேட்டையில் கைதான பழங்குடியின வாலிபர்கள், 2 பேர் உட்பட 3 பேரை வனத்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்கப்பட்டவர்கள் ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.

'வனத்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us