sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கல்லுாரி முதல்வர் அவதுாறாக பேசுவதாக குற்றச்சாட்டு பேராசிரியர்கள் போராட்டத்தால் பரபரப்பு

/

கல்லுாரி முதல்வர் அவதுாறாக பேசுவதாக குற்றச்சாட்டு பேராசிரியர்கள் போராட்டத்தால் பரபரப்பு

கல்லுாரி முதல்வர் அவதுாறாக பேசுவதாக குற்றச்சாட்டு பேராசிரியர்கள் போராட்டத்தால் பரபரப்பு

கல்லுாரி முதல்வர் அவதுாறாக பேசுவதாக குற்றச்சாட்டு பேராசிரியர்கள் போராட்டத்தால் பரபரப்பு


ADDED : ஜன 22, 2025 11:08 PM

Google News

ADDED : ஜன 22, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி, ; ஊட்டி அரசு கலை கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள்; ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாக குற்றம் சாட்டி, கண்டன போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி அரசு கலை கல்லுாரியில், இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில், 4,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லுாரியின் முதல்வராக உள்ள ராமலட்சுமி என்பவர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை அவதுாறாகவும்; தரக்குறைவாகவும் பேசுவதாக குற்றம் சாட்டி, நேற்று காலை கல்லுாரி வளாகத்தில் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடு பட்ட பேராசிரியர்கள் கூறுகையில், 'முதல்வர் இந்த கல்லுாரிக்கு வந்தது முதல், பணியாளர்களை அவ துறாக பேசி வருகிறார்.

சமீபத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பெண் ஊழியரை மிகவும் தரக் குறைவாக பேசி உள்ளார். இதனால் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, கல்லுாரி முதல்வரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்,' என்றனர். முதல்வர் ராமலட்சுமி கூறுகையில்,''கல்லுாரி நிர்வாகம் சரியாக இயங்குவதற்காக அனைவரிடமும் பணியை துரிதப்படுத்த வலியுறுத்தி வருகிறேன். யாரையும் அவதுாறாக, தகாத வார்த்தைகளால் இதுவரை நான் பேசியது கிடையாது. கல்லுாரி மாணவ, மாணவிகள் யாரும் இது போல் குற்றச்சாட்டு தெரிவிக்கவில்லை. நான் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் என்னுடைய சில வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us