sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தொழிலாளர் வசிக்கும் பகுதியில் நாள்தோறும் முகாமிடும் யானை

/

தொழிலாளர் வசிக்கும் பகுதியில் நாள்தோறும் முகாமிடும் யானை

தொழிலாளர் வசிக்கும் பகுதியில் நாள்தோறும் முகாமிடும் யானை

தொழிலாளர் வசிக்கும் பகுதியில் நாள்தோறும் முகாமிடும் யானை

1


ADDED : நவ 08, 2024 10:46 PM

Google News

ADDED : நவ 08, 2024 10:46 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே காவயல் பகுதியில், தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு நாள்தோறும் வரும் யானையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவயல் அமைந்துள்ளது. இப்பகுதியில், டான்டீ தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் மழவன் சேரம்பாடியில் இருந்து சேரம்பாடி மற்றும் கையுன்னி, காரக்கொல்லி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலையும் அமைந்துள்ளது. இதனை ஒட்டி வனத்துறைக்கு ஒப்படைக்கப்பட்ட, டான்டீ தேயிலை தோட்டத்தில் நாள்தோறும் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக யானைகள் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியிலும் முகாமிடுவதால், தொழிலாளர்கள் மற்றும் பிற மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை உள்ளது. மேலும், தொழிலாளர்கள் குடியிருப்புகளில் இருந்து, 30 மீட்டர் தொலைவில் கழிப்பிடம் அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் கழிப்பிடத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, முகாமிட்டுள்ள யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us