sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இணை சார் பதிவாளரிடம் ரூ.3.98 லட்சம் :லஞ்ச ஒழிப்பு துறை பறிமுதல்

/

இணை சார் பதிவாளரிடம் ரூ.3.98 லட்சம் :லஞ்ச ஒழிப்பு துறை பறிமுதல்

இணை சார் பதிவாளரிடம் ரூ.3.98 லட்சம் :லஞ்ச ஒழிப்பு துறை பறிமுதல்

இணை சார் பதிவாளரிடம் ரூ.3.98 லட்சம் :லஞ்ச ஒழிப்பு துறை பறிமுதல்


ADDED : ஜன 31, 2025 08:24 PM

Google News

ADDED : ஜன 31, 2025 08:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டியில், இணை சார் பதிவாளரிடம் கணக்கில் வராத, 3.98 லட்சம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஷாஜகான்,55, என்பவர், இணை சார் பதிவாளராக (பொ) பணியாற்றி வருகிறார். இன்று மாலை இவர் பணி முடித்து, திருப்பூருக்கு வாடகை வாகனத்தில் சென்றுள்ளார்.அப்போது, ஊட்டி சேரிங்கிராஸ் அருகே, கோத்தகிரி சாலையில், லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, தேர்தல் தாசில்தார் சீனிவாசன், எஸ்.ஐ.,க்கள் சக்தி, சாதன பிரியா மற்றும் ரங்கநாதன் ஆகியோர் இவரின் வாகனத்தை நிறுத்தினர்.

சோதனை செய்ததில், 3.98 லட்சம் ரூபாய் கணக்கில்வராத பணம் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார், ஷாஜகானை அவரது அலவலகத்துக்கு மீண்டும் அழைத்து வந்து இரவு வரை விசாரணை நடத்தினர்.

டி.எஸ்.பி., ஜெயகுமார் கூறுகையில்,'' ஊட்டி இணை சார் பதிவாளர் ஷாஜகான், திருப்பூருக்கு பணி மாற்றல் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, மாலை தனியார் வாகனத்தில் சென்றார். தகவலின் பேரில், அவர் வாகனத்தை சோதனையிட்ட போது, கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. மற்ற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us