ADDED : பிப் 23, 2026 04:32 AM
கூடலூர்: -முதுமலை புலிகள் காப்பம் கார்குடி பகுதியை சேர்ந்தவர் கிரீஷ், 27. இவர், முதுமலை கார்குடி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் உட்பட நான்கு பேர், கார்குடி வனச்சரகம் பெல்லூர்பெட்டா வனப்பகுதியில் நேற்று, காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நீரோடை பகுதியிலிருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானையை பார்த்து, தப்பிப்பதற்காக அனைவரும் ஓடி உள்ளனர். ஆனாலும், யானை துரத்தி சென்று, கிரீஷை தாக்கியது. உடன் சென்றவர்கள் சத்தமிட்டு யானையை விரட்டி, அவரே மீட்டனர்.
ஆனாலும், யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தர். தொடர்ந்து, சிகிச்சைக்காக கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

