/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கலைஞர் கனவு இல்லம்; தாயகம் திரும்பியவர்கள் மனு
/
கலைஞர் கனவு இல்லம்; தாயகம் திரும்பியவர்கள் மனு
ADDED : ஜூலை 01, 2025 09:46 PM
ஊட்டி; கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க கோரி தாயகம் திரும்பியவர்கள் மனு அளித்துள்ளனர்.
அதிகரட்டி பகுதியை சேர்ந்த பாலன் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
ஊட்டி அருகே அதிகரட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் தின கூலியாக வேலை செய்து வருகிறேன். இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை மனு அளித்துள்ளேன். மனு குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாநில அரசு , கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் , இலவச வீடு வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் , அதிகரட்டி சுற்று வட்டாரத்தில் தாயகம் திரும்பிய இலங்கை மக்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.